கொங்கு நாட்டு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழு கூட்டம் சின்னியம்பாளையத்தில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளரான ஈ.ஆர் ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள மேம்பாலத்தை சின்னையம்பாளையம் வரை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதை அவர் நீடிப்பு செய்து தருவதாக உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 எம்.எல்.ஏக்கள் இருந்தும் ஒருவரும் இதைப் பற்றி பேசவில்லை. சென்னை மாநகராட்சி 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கோவையும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சியில் பங்கு தருகிறோம், அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என சில கட்சித் தலைவர்கள் சுயநலத்துடன் பேசி வருகிறார்கள். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, நாம் தமிழர் கட்சியிலும், சீமானிடமும் சில வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் தான் உள்ளது. ஆனால் அதற்குள் கூட்டணி தொகுதி பங்கீடு பற்றி எல்லாம் கேட்கிறார்கள். தமிழகத்தில் மதுவிலக்கு அமல் படுத்தினால் கொ.ம.தே.க வரவேற்கும் அதானி விவகாரத்தில் அரசு மவுனம் காப்பது நல்லதல்ல, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.