மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் ஜித்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஜித்துவின் சகோதரிக்கு மூன்று வயது குழந்தை உள்ளது. அந்த குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. இதனால் ஜித்துவும் அவரது சகோதரியும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது ஜித்து தான் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் விளையாட்டாக குழந்தையை அடித்துள்ளார். இதனால் கீழே விழுந்த குழந்தையின் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. இதனால் ஜித்து யாருக்கும் தெரியாமல் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து குழந்தையின் உடலை எரித்து விட்டார். அதன் பிறகு ஒன்றுமே தெரியாதது போல குழந்தையை தேடியது விசாரணையில் தெரியவந்தது.