கடலூர் மாவட்டத்தில் செங்குட்டுவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கயல் வேந்தன்(35) என்ற மகன் உள்ளார். இவர் அந்தமானில் வேலை பார்க்கிறார். கயல் வேந்தனுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கயல்விழி(29) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் செங்குட்டுவனம் பானுமதியும் கூடுதல் வரதட்சனை கேட்டு மருமகளை கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் நேற்று கயல்விழி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கயல்விழியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.