நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததில் இருந்து அவரை தம்பி தம்பி என அழைத்து வந்தார் ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அப்போது விஜய் அரசியல் கட்சிகளை விமர்சித்து பேசினார். அந்த மாநாட்டிற்கு பிறகு சீமான் கொள்கை ரீதியாக விஜய் தனது அரசியல் எதிரி என கூறினார். மேலும் விஜயை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். சீமானின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆரம்பத்திலிருந்து விஜடை தம்பி என அழைத்து வந்த சீமான் திடீரென மாநாட்டுக்கு பிறகு அவரை கடுமையாக விமர்சிக்க காரணம் என்ன என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அதாவது மாநாடு நடைபெறுவதற்கு முன்பு சீமான் தம்பி இது அரசியல் சாதாரணமல்ல. அப்பவே நான் சொன்னேன். இது கொஞ்சி கெஞ்சி கடிக்கிற மீன்கள் நிறைந்த குளம் இல்ல. கொடிய முதலைகள் வாழற இடம். ஒவ்வொரு காலடியும் பார்த்து எடுத்து வைக்கனும்னு நான் சொன்னேன் என கூறியுள்ளார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக மாநாட்டில் பேசிய விஜய் அரசியலில் காலடி எடுத்து வைக்கும் போது சிலர் தம்பி உனக்கெல்லாம் என்ன தெரியும். நீ எப்படி தாக்குப்பிடிப்ப.. இந்த அரசியல் பெரிய அகழி மாதிரி.. தண்ணிக்குள்ள மூழ்கிட்டு, தலையை தூக்கிட்டு, வாய பிளந்துகிட்டு பெரிய பெரிய முதலைகள் ரகம் ரகமா இருக்குமே. இவங்களெல்லாம் தாண்டி நீ எப்படி கோட்டைகுள்ள காலடி எடுத்து வைக்கப் போற.. உன்னால முடியுமான்னு கேள்வி மேல கேள்வி கேட்பாங்க என கூறியுள்ளார். விஜய் சீமானை தான் மறைமுகமாக விமர்சித்து பேசினார். அந்த கோபத்தில் தான் மாநாடு முடிந்த பிறகு சீமான் எங்கு பார்த்தாலும் விஜயை விமர்சித்து பேசி வருகிறாராம்.

 

View this post on Instagram

 

A post shared by Second Show (@secondshowtamil)