திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஊத்துப்பாளையத்தில் நிகழ்ந்த சோக சம்பவத்தில் தாய், மகள் உயிரிழந்துள்ளனர். ஊத்துப்பாளையத்தை சேர்ந்த மயிலாத்தாள் (87) என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகள் புஷ்பவள்ளி நாயகி தாயார் மயிலாத்தாளுக்கு உணவு கொடுக்க சென்றார். அப்போது, மயிலாத்தாள் இயற்கை உபாதைக்காக வெளியே சென்றபோது, அருகில் சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தார்.

தாயை காப்பாற்ற புஷ்பவள்ளி நாயகி கிணற்றில் குதித்தார். ஆனாலும் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த தாராபுரம் தீயணைப்பு துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.