தமிழகம் முழுவதும் தற்போது பள்ளி கல்வித்துறை அனைத்து அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது அரசு பள்ளி மாணவர்கள் JEE, NID தேர்வுக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தேர்வு குறித்து எடுத்துரைத்து தகுதியானவர்களை விண்ணப்பிக்க வைக்கும் பணியை தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேர்வுகளுக்கு அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்திய விண்ணப்பிக்க வைத்து அவர்களை அந்த தேர்வுகளில் வெற்றி பெற வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு நவம்பர் 22ஆம் தேதிக்குள்ளும், நிட் தேர்வுக்கு டிசம்பர் 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.