பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த நிலையில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பாம்பு கடி தொடர்பான சிகிச்சை விபரங்களை தமிழ்நாடு அரசுக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

இதன் மூலம் பாம்பு கடிக்கு சிகிச்சை அளிப்பதற்கான உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும். குறிப்பாக ஊரகப்பகுதிகளில் பாம்பு கடிக்கான மருந்துகளை தேவையான அளவு இருப்பு வைக்க முடியும்.