
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி சாலையில் நடந்து முடிந்தது. மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் விஜய் என்னவெல்லாம் பேசப்போகிறார் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது விஜய் தனது எழுச்சிமிக்க பேச்சால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தனது அரசியல் கொள்கைகள் கோட்பாடுகள், மக்கள் நலன் என அனைத்தைப் பற்றியும் விளக்கமாக பேசினார்.
பெண்களுக்கான பாதுகாப்பு, இளைஞர்கள் எதிர்காலம் கொடி விளக்கம், அரசியல் தலைவர் முன்னோடிகள் என மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் உணர்ச்சிகரமாக விஜய் பேசினார். மேலும் அரசியல் கட்சிகள் குறித்தும் விமர்சித்து பேசினார். அவர் பேசும் போது, பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார் உங்க கொள்கை தலைவரா? அப்படின்னு அவங்களாவே முடிவு பண்ணிட்டு ஒரு கூட்டம் வருவாங்க. அவங்க கூச்சல் மேல கூச்சல் போட்டுக்கிட்டு ஒரு பெயிண்ட் டப்பாவை தூக்கிட்டு கிளம்பிடுவாங்க. பெரியார் எங்க கொள்கை தலைவர் தான். ஆனால் அவரோட கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்க கையில் எடுக்க போறது இல்ல.