
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒருபகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தன் பெற்றோருடன் வசித்து வரும் நிலையில் அதே குடியிருப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் வசித்து வருகிறார். இவருடைய பெயர் ரவிக்குமார். இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்து வரும் நிலையில் சம்பவ நாளில் சிறுமி ஒரு ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரவிக்குமார் அந்த ஆண் நண்பரை விரட்டி விட்டுவிட்டு இனி இதுபோன்று நடக்கக்கூடாது என்று சிறுமிக்கு அறிவுரை வழங்கியதோடு அந்த சிறுமியின் போன் நம்பரையும் வாங்கிக் கொண்டார்.
பின்னர் அந்த சிறுமியை தன்னுடைய அறைக்கு அழைத்து சென்ற அவர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவரிடம் இருந்து எப்படியோ தப்பித்து போராடி வெளியே வந்த சிறுமி தன் பெற்றோரிடம் நடந்த விஷயங்களை கூறினார். இதற்கிடையில் ரவிக்குமார் சிறுமியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்கள் குறித்து வெளியே சொல்ல கூடாது என கூறி மிரட்டியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நடந்த சம்பவங்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..