
சென்னையில் இந்தி மாத நிகழ்ச்சி நேற்று பிற்பகல் கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து பாடலில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரி விடுபட்டது. இதனால் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மிகுந்த கட்டணத்தை தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அர்.என்.ரவி ஆளுநரா? அரியநரா?என்ற கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த கேள்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆளுநர் ரவி இனவாத கருத்துக்கள், தவறான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுவெளியில் தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு நான் மிகுந்த வருத்தம் அளிக்கிறேன். அதாவது நான் தமிழ் தாய் வாழ்த்து நன்றாக பாடுவேன் என்பது முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும். ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் தவறான குற்றச்சாட்டுகளை அறிவிப்பது முதலமைச்சரின் மதிப்பை குறைக்கும் வகையில் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.