மகாராஷ்டிரா மாநிலம் ஃபசல்புராபகுதியில் அமைந்திருந்த மகாராஷ்டிரா வங்கியின் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஏடிஎம்மில் திருட முயன்ற இருவர் பெண்களைப் போன்று ஆடை அணிந்து வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் ஸ்பிரே போன்று ஒன்றை அடிக்க முயற்சித்துள்ளனர்.

இதனால் அவர்களைப் பற்றிய முழு அடையாளமும் தெரியவில்லை. ஆனாலும் ஏடிஎம் மிஷினில் திருடும் என்ற போது அலாரம் ஒலித்ததால் திருடர்கள் இருவரும் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.