
தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது அதன்படி ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி, இன்று கோவையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இரவு 11:30 கோவையில் இருந்து புறப்பட்டு நாளை காலை 10 மணிக்கு எழும்பூரை வந்தடையும். திங்கள் கிழமை சென்னை எழும்பூரில் இருந்து கோவை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 10:00 மணி அளவில் புறப்பட்டு மாலை 6:00 மணிக்கு போத்தனூருக்கு வந்தடையும்.
புதன்கிழமை சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை 10:50க்கு நாகர்கோவிலை வந்தடையும். மேலும் நாகர்கோவில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் அமைக்கப்பட்டுள்ளது இது நாகர்கோவிலில் இருந்து இரவு 7:30க்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலையில் 11:25க்கு சென்னை சென்ட்ரலை அடையும். செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து சிறப்பு ரயில் 11:45க்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு புதன்கிழமை 1:50க்கு வந்தடையும். புதன்கிழமை தூத்துக்குடியில் இருந்து 4:15 க்கு புறப்படும் சிறப்பு ரயில் வியாழன் காலை 8:55க்கு சென்னை சென்ட்ரலில் வந்தடையும்.