
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நாம் எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிர்கால தலைமுறையினரை கவரும் நோக்கத்தோடு வங்கிகளில் ரோபோவை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது இருக்கும் சூழ்நிலை அடிப்படையில் வங்கிகளுக்கு சென்றால் வாடிக்கையாளர் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து திரும்ப வருவதற்கு நீண்ட நேரம் ஆகும்.
ஆனால் இனிவரும் காலங்களில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் பொருட்டு வங்கிகளில் ரோபோக்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். அனேகமாக 18 முதல் 24 மாதங்களில் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் அதை முன்னெடுக்க இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அஜய்குமார் சுவஸ்தவா தெரிவித்துள்ளார்.