
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாத வருமானம் ரூ.10,000 மட்டுமே உள்ள தொழிலாளி ராஜிவ் குமாருக்கு ரூ.2 கோடிக்கான வருமான வரி நோட்டீஸ் வந்துள்ளது. இதில் மேலும் அவர் இரண்டு நாட்களுக்குள் ரூ.67 லட்சம் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் ராஜிவ் குமாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய ராஜிவ் குமார், “எனக்கு வருமான வரி என்றால் என்னவென்று கூட தெரியாது. என் வாழ்நாள் முழுவதும் இந்தத் தொகையை சேர்க்க முடியாது” என்று வேதனை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து மேல்முறையீடு செய்யுமாறு வருமான வரித்துறை அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம், வருமான வரித்துறையின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.