
தமிழகத்தில் மது கஞ்சா போதையில் இருப்பவர்கள் செய்யும் கொலை குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இதுபோன்று சில அரசியல் கட்சி பிரமுகர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வகையில் தற்போது தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியில் அதிமுக பிரமுகரான வெளியப்பன், சென்னையில் ஜெயராஜ், ஆத்துப்பாளையத்தில் கோகுல், கிருஷ்ணகிரியில் பழனி, கோவையில் கோகுல், ராமநாதபுரத்தில் மோகன் ஆகியோர் மது போதை உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி ஆகியுள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.