மஹாராஷ்டிராவின் நாக்பூரில் இரண்டு பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்  செய்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரை அங்கு கூடியிருந்த மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவிகள் டிரைவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் இருந்து கீழே இறக்கி அடிக்கத் தொடங்கினர், அருகில் இருந்தவர்களும் அந்த டிரைவரை அடித்து உதைத்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ, இப்போது சமூக ஊடகங்களில் வைரலாக, ஓட்டுநர் அடிக்கப்படுவதைக் காட்டுகிறது, அதே நேரத்தில் மாணவிகளின் ஒருவரை கூட்டத்தில் இருந்த ஒரு பெண் சமாதானப்படுத்தினார். இதுபோல குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது பாலியல் அத்துமீறலுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மக்கள் வைத்தனர்.

“>