கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் சுரேஷ் கோபி. இவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் முதல்முறையாக கேரளாவில் பாஜக காலூன்றியுள்ளது. இதன் காரணமாக அவருக்கு மத்திய இணை மந்திரி பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் 22 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தொடர்ந்து அந்த படங்களில் நடிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் சுரேஷ்கோபி அனுமதி கேட்டுள்ளார்.

ஆனால் அந்த பேப்பரை கிழித்து கோபத்தில் அமிதாஷா தூக்கி வீசியதாக சுரேஷ் கோபி குற்றம் சாட்டியுள்ளார். அதன் பிறகு தனக்கு சினிமா தான் முக்கியம் என்றும் நடிக்கவில்லை என்றால் தான் இறந்து விடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். அதோடு தொடர்ந்து நான் சினிமாவில் நடிப்பேன் என்றும் ஒருவேளை சினிமாவில் நடிக்க கூடாது என்று அழுத்தம் கொடுத்தால் நிச்சயம் மந்திரி பதவியை மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்துவிடுவேன் என்று அறிவித்துள்ளார். மேலும் தலைமை உத்தரவை மீறி சுரேஷ்கோபி தொடர்ந்து சினிமாவில் நடிப்பதாக கூறியுள்ளதால் அவர் மந்திரி பதவி ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.