
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி. இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கேரளா திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தற்போது மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரியாக இருக்கிறார். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுரேஷ் கோபி பேசிய விஷயம் பேசும் பொருளாக மாறி உள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, நான் சமூக வலைதளத்தில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஒரு செய்தியை பார்த்தேன்.
அது எனக்கு மிகவும் கவலையை ஏற்படுத்துகிறது. அதாவது முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அதற்கு யார் பொறுப்பு. அணையில் தற்போது நிரப்பப்படும் அளவுக்கு தண்ணீர் நிரப்பினால் போதும் என்று கூறிய கோர்ட் பொறுப்பேற்குமா? அல்லது அதனை செயல்படுத்தும் அதிகாரிகள் பொறுப்பேற்பார்களா?. எனவே இந்த விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்ற கேள்விக்கு நிச்சயம் பதில் வேண்டும். மீண்டும் ஒரு பேரழிவை கேரளாவால் தாங்க முடியாது. மேலும் முல்லைப் பெரியாறு அணை இடிந்த விழுமா விழாத என்ற சந்தேகம் இருப்பதாக வந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்றார்.