கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் என்பவர் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இதனால் காவல்துறையினர் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் இந்த மனுவை ரத்து செய்யக்கோரி சென்னை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் சிவஞானம் ஆகிய இருவரும் விசாரணை நடத்தினர்.

அப்போது காவல்துறையின் தரப்பில் மனுதாரர் போலி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டதோடு போலி ஊதிய சான்றிதழ் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது. பின்பு அதன் மூலம் அவர் வங்கியில் பணம் பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் அவர் சுமார் 3 கோடியே 30 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்ததால் அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் இவை அனைத்தும் தனிநபர் சார்ந்த குற்றங்கள் எனவும் காவல்துறையினர் இதை விசாரணை நடத்தி பணத்தை மீட்கலாம் எனவும் கூறினர். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவரை நிரபராதி என உத்திரவிட்டனர். அதன்பின் நீதிபதிகள் கள்ளச்சாராய விற்பனை, மாமுல் வாங்குவது, கொலை வழக்கு மற்றும் போதைப் பொருள்களை விற்பனை செய்வது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் தொடர்ந்து 2 அல்லது 3 ஆண்டுகள் ஒருவர் ஈடுபட்டிருந்தால் மட்டுமே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விதிமுறைகள் இருக்கிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் நீதிபதிகள் இதுபோல குண்டர் தடுப்பு சட்டத்தை சாதாரணமாக பயன்படுத்துவதை நீதிமன்றம் அனுமதிக்காது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சட்ட விரோதமாக ஒருவர் ஒரு நாள் கைது செய்யப்பட்டு காவலில் இருந்தாலும் கூட அது சட்டவிரோதம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.