இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் டி20 போட்டிகளில் 3 தொடரிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து ஒரு நாள் போட்டி தொடங்கிய நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய நிலையில் அந்த போட்டி ட்ராவில் முடிந்தது.

அந்த போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தார்கள். இதற்கான காரணத்தை பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதாவது கடந்த புதன்கிழமை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் கிரிக்கெட் வீரருமான அவுன்ஷுமான் காலமானார். மேலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து போட்டியில் விளையாடியதாக கூறியுள்ளது.