
தமிழகத்தில் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணியிட மாறுதல் என பல கோரிக்கைகளை நீண்ட நாட்களாக அரசிடம் முன்வைத்து வருகிறார்கள். ஆனால் அரசு இதற்கு செவி சாய்க்காத நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை சென்னை டி பி ஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட உள்ளதாக தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243 ரத்து மற்றும் காலி பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றை வலியுறுத்தி போராடுவதாக அந்த குழு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று தொடக்கப் பள்ளிகள் செயல்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.