கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சி 10-வது வார்டு காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலராக உஷாராணி என்பவர் இருக்கிறார். இவருடைய கணவர் ஜாக்சன். இவர் டெம்போ லாரி ஓட்டி வருகிறார். இவரை நேற்று இரவு செல்ஃபோன் மூலம் தொடர்பு கொண்ட சில மர்ம நபர்கள் அந்த பகுதியில் உள்ள தேவாலயம் அருகே வருமாறு கூறியுள்ளனர்.

அதன் பிறகு பிரபல ரவுடி உட்பட  6 பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.