
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரவுளி பகுதியில் நீரஜ் ராஜ்புத் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருவதோடு வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவர் எருமை மாடுகளையும் வளர்த்து வரும் நிலையில் அதில் ஒரு மாடு கடந்த 17ஆம் தேதி கன்று குட்டியை ஈன்றது. அதில் தான் ஆச்சரியமே இருக்கிறது. அதாவது எருமை மாடு ஈன்ற கன்றுக்குட்டி வெள்ளை நிறத்தில் இருக்கிறது. பொதுவாக எருமை மாடுகள் கருப்பு நிறத்தில் தான் இருக்கும்.
அப்படி இருக்கையில் இந்த மாடு மட்டும் வெள்ளை நிறத்தில் கன்று குட்டியை ஈன்றது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயமாக இருப்பதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் வந்து அதை பார்த்து செல்கிறார்கள். இந்நிலையில் அந்த கன்று குட்டியின் உடம்பில் ஒரு சிறிய துரும்பு அளவில் கூட கருப்பு நிறம் இல்லாததால் அதை அதிசயம் என்று வியந்து கூறுகிறார்கள். ஆனால் கால்நடை மருத்துவர்கள் இதைப் பற்றி கூறும்போது மரபணு குறைபாடு காரணமாக இப்படி பிறந்து இருக்கலாம். மேலும் உடம்பில் மெலனின் குறைபாடு குறைவாக இருப்பதால்தான் வெள்ளை நிறத்தில் கன்று குட்டி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.