
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பலரும் புதுவிதமான வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் ஒரு சிலர் எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் உயிரை படையம் வைத்து ரீல்ஸ் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் பல்லடம் வெள்ளகோவில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.
அதாவது பைக்கில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் திடீரென்று நெடுஞ்சாலையின் நடுவில் பைக்கை நிறுத்தி, அதன் மேல் ஏறி நின்று ரீல்ஸ் செய்ய தொடங்கியுள்ளனர். அதனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர்களின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.