
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையேயான வார்த்தை போர் மூண்டு வருகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய் இருப்பதால் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி புறக்கணிப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராகிவிடுமா? சட்டம் ஒழுங்கு கெட்டு போனதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறேன் என்று கூறிய எடப்பாடி இன்று வேறு காரணம் சொல்கிறார். எடப்பாடி தமிழக மக்களுக்கு ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக இல்லை என்று கூறியுள்ளார்.