குவைத் நாட்டில் உள்ள கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீபத்தில் 50 பேர் உயிரிழந்த நிலையில் ஐந்து பேர் தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமுவும் ஒருவர். இவருடைய மறைவால், அவருடைய மொத்த குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இந்நிலையில் ராமுவின் மகன் இதுகுறித்து கூறுகையில், குவைத்தில் அப்பா 26 வருடமாக வேலை செய்து வந்தார். தற்போது விசா முடிந்து ஊருக்கு வரும் சமயத்தில் இப்படி ஒரு சம்பவம் ஆகிவிட்டது.  அவருடைய உயிரை தான் காப்பாற்ற முடியவில்லை. அவருடைய உடலையாவது எங்களிடம் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.