தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் மற்றும் வங்கி கணக்கு பெறும் சேவைகள் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த திட்டம் மூலம் நடப்பு கல்வியாண்டில் 60 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவசமாகவும் தனியார் பள்ளிகளிலும் கட்டணத்துடன் இந்த சேவை கிடைக்கிறது.