
இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் எஸ்எம்எஸ் மூலமாக ரயில் டிக்கெட் கட்டண விவரத்தை எளிதில் தெரிந்து கொள்ளும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு நம்முடைய செல்போன் எண்ணில் இருந்து 139 என்ற எண்ணுக்கு கீழ்காணும் செய்தியை எஸ் எம் எஸ் ஆக அனுப்ப வேண்டும். FARE என்று டைப் செய்து ரயில் எண், பயணத் தேதி, புறப்படும் மற்றும் சென்று சேரும் இடங்களில் எஸ்டிடி கோடுகள், வகுப்பை இடைவேளை விட்டு குறிப்பிட்டு அனுப்பினால் கட்டண விவரம் அனுப்பப்படும். இதற்கு மூன்று ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.