கடலூர் மாவட்டம் காட்டாண்டிகுப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர்  ரமேஷ் என்ற குமாரவேல். இவருக்கும் மீனா என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும்  வீட்டின் மேல் மாடியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்பிய குமாரவேல் மேல் வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு மறுநாள் காலையில் வேலைக்கு செல்லும் நேரம் ஆகியும் குமாரவேல் கீழே வரவில்லை. மருமகள் மீனாவும் வராததால் குமாரவேலின் பெற்றோர் மேலே சென்று பார்த்தனர்.

அப்பொழுது மின்விசிறியில் சேலையை மாட்டி அவர்கள் இருவரும் சடலமாக தொங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இரண்டு சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வெளியான விசாரணையில் குமாரவேலுக்கு ஏற்கனவே வேறொரு பெண்ணோடு திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தை இல்லாததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை குமாரவேல் பிரிந்து சென்றார்.

அதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குமார வேலுவுக்கு மீனாவை திருமணம் செய்து வைத்துள்ளனர். இப்போதும் குழந்தை இல்லாததால் இருவரும் தற்கொலை செய்துள்ளனர். இருவருக்கும் உடலில் வேறு எந்த காயமும் இல்லை. இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தற்கொலையில் முடிந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.