
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் வருகின்ற ஜூன் நான்காம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாஜகவை சேர்ந்த பலரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என கூறி வருகிறார்கள்.
மேலும் ஜெயலலிதா கர சேவைக்கு ஆட்களை அனுப்பினார் என்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழிசை கூறியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார் என கூறியுள்ளார்.