ஐபிஎல் 17-வது போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் பல்வேறு நகரங்களில் போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியும், இரண்டாம் இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக களம் இறங்கிய ராஜஸ்தான் அணியில் பட்லர் அடித்த சதத்தின் மூலம் கடைசி ஓவரின் கடைசி பந்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதனால் கொல்கத்தா அணையின் வீரர்கள் மிகுந்த கவலையும் அதிர்ச்சியும் அடைந்தனர். அவர்கள் ஓய்வறையில் மிகவும் சோகமாக காணப்பட்ட நிலையில் கொல்கத்தா அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் அங்கு சென்றார். அவர் முதலில் இரு அணிகளுக்கும் வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஓய்வறையில் சோகமாக இருந்த கொல்கத்தா அணியின் வீரர்களுக்கு நடிகர் ஷாருக்கான் ஆறுதல் கூறினார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
As King Khan says, we’re always proud of our Knights! 💜✨ pic.twitter.com/QEMRMSq1oQ
— KolkataKnightRiders (@KKRiders) April 17, 2024