இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மற்றும் மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பொருட்களை நியாயமான முறையில் வழங்கவும் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மின்னணு இந்தியாவை நோக்கிய பயணத்திற்கு மத்திய அரசின் உணவு பொது விநியோகத் துறையின் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா அவர்கள் முதல் கட்டமாக இமாச்சலப் பிரதேசத்தின் உனா, ஹமீர்பூர் போன்ற மாவட்டங்களில் திறந்தவெளி கட்டமைப்பு மின்னணு வர்த்தகத்தில் நியாய விலை கடை போன்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். காணொளி மூலமாக மொத்தம் 11 நியாய விலை கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலமாக வேளாண் மனிதர்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கான கூடுதல் வழிகள் கிடைக்கும் எனவும் பயனாளிகளின் மனநிறைவு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டப் பயனாளிகளுக்கு வாடிக்கையாளர்கள் தளத்திற்கான அணுகல், சில்லறை விற்பனையாளர்கள் மின் வணிக தலங்களுடன் சமமாக போட்டியிடக் கூடிய திறன் மற்றும் முகவர்களுக்கு மின்னணு சந்தையில் தெளிவுநிலை போன்ற பல நன்மைகள் இந்த திட்டத்தின் மூலமாக மக்களுக்கு கிடைக்கும். இணையதளத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களை தீர்க்கவும் நியாய விலை கடை முகவர்களை பொதுமக்கள் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.