
தமிழ்நாடு ரேஷன் கடைகள் தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருட்களை இனிமேல் பாக்கெட்டுகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால், பொருட்களின் தரம் குறைவதை தடுப்பது மட்டுமின்றி எடையிலும் மாற்றம் இருக்காது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ரேஷன் கடைகள் மூலமாக ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.