ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட். எக்ஸ்போசாட் உள்பட 10 செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. போலரிமீட்டர் செயற்கைக்கோள் மூலம் கருந்துளை, விண்மீன் மண்டலம், நெபுலா குறித்து ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கல்லூரி மாணவிகள் தயாரித்த வெசாட் செயற்கை கோளும் ஏவப்பட்டது.

சூரியன், சந்திரன், செவ்வாய் தாண்டிய பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சிக்காக செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது. எக்ஸ்ரே கதிர் மூலம் வானியல் இயக்கங்களை ஆய்வு செய்ய எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது.
போலரிமீட்டர் செயற்கைக்கோள் கிழக்கு சுற்றுவட்ட பாதையில் 650 கிலோமீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்படுகிறது. பிஎஸ்4 என்ற ராக்கெட் பாகம் poem 3 செயற்கைக்கோள்களை 350 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தும்.