தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்படும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர் தூத்துக்குடியில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை மற்றும் 12-ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் இரவு 11 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும். பின்னர் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ஊர்களின் வழியாக மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும். இதே போல மறுமார்க்கத்தில் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3:30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 4:40 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் வழியாக சென்னை-தூத்துக்குடி சிறப்பு ரயில் இயக்கம்…. பயணிகளுக்கு குட் நியூஸ்..!!
Related Posts
காதலனோடு சேர்ந்து தீக்குளிப்பு…. இறுதியில் நேர்ந்த சோகம்…. காதலி அதிர்ச்சி வாக்குமூலம்…!!
மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி இளம் பெண் சிந்துஜா தன் மீதும் மற்றும் தனது காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி…
Read moreBreaking: தூத்துக்குடி மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை….!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 22ஆம் தேதி வைகாசி விசாகம் விமர்சையாக நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வருகை புரிவார்கள். இதன் காரணமாக வருகின்ற…
Read more