இஸ்ரேல் ஹமாஸ் இடையே 14 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நிதன்யாகு சந்தித்து பேசியுள்ளார்.

ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசிய பெஞ்சமின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிங்கம் போல் போரிட்டதாகவும் தொடர்ந்து இதே போன்று தான் போரிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.