
நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷாவின் மறைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் நாசர். இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட இவர், தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் சங்க தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் நடிகர் நாசரின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் தட்டான்மலை தெருவில் வசித்து வந்த நாசரின் தந்தை மாபுப் பாஷா (வயது 95) உடல் நலக்குறைவால் உயிரிந்துள்ளார். சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷாவின் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க தலைவருமான திரு. நாசர் அவர்களின் தந்தை திரு. பாஷா அவர்கள் வயது மூப்பு காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து வருந்துகிறேன். தந்தையின் மறைவால் வாடும் திரு. நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
https://twitter.com/TNDIPRNEWS/status/1711733957795185116