மதுரையில் இன்று காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் சிலிண்டர் மூலம் ரயிலுக்குள் சமைக்க முயற்சி செய்த போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரை ரயில் விபத்து தொடர்பாக, தெற்கு ரயில்வே ADGP வனிதா செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, “ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதி வேலைகளுக்கான சாத்தியம் ஏதும் இல்லை.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கியது. பிரேத பரிசோதனை முடிந்தவுடன் 7 பேரின் உடல்கள் சென்னை கொண்டுவரப்பட்டு, விமானம் மூலம் உ.பி. அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.