
தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில்களை மக்கள் அன்றாடம் அதிகம் பயன்படுத்தி வருவதால் மெட்ரோ ரயில்களில் டிக்கெட் எடுக்க கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் பயணிகளின் வசதிக்காக கடந்த மே மாதம் 12ஆம் தேதி வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக மெட்ரோ நிர்வாகம் புதிய whatsapp எண் ஒன்றை வெளியிட்டது. இதில் பொதுமக்கள் ஹாய் என்று மெசேஜ் செய்தால் சார்ட் போட் என்ற ஆப்ஷன் வரும், அதில் பொதுமக்கள் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வசதி தொடங்கப்பட்டு ஒரு மாதம் ஆகி உள்ள நிலையில் மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரே மாதத்தில் மட்டும் 70 ஆயிரத்து 618 பேர் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்து ரயிலில் பயணித்துள்ள நிலையில் அடுத்த ஒரு மாதத்தில் இதைவிட இரண்டு மடங்கு பயணிகள் இந்த வசதியை பயன்படுத்துவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.