
அக்கா தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொள்வதை, தம்பி அருகில் இருந்து மொபைலில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் CCTV வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.
தீயில் பற்றி எரியும் அந்த பெண்ணின் குரல் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த பெண்ணை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சி அருகில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதில் அப்பெண்ணுக்கு கழுத்தில் இருந்து இடுப்பு வரை காயம் ஏற்பட்டதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.