சின்ன கண்ணன் அழைக்கிறான், புத்தம் புது காலை, அழகிய கண்ணே, இளைய நிலா பொழிகிறது ஆகிய பாடல்களில் புல்லாங்குழலால் மாயம் செய்திருக்கும் சுதாகர் காலமானார். இளையராஜாவின் குழுவில் அருண்மொழி இணையும் வரை அவரது பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்தவர் சுதாகர் தான்.

இளையராஜாவின் நத்திங் பட் வின்ட் உள்ளிட்ட ஆல்பம் இவர்தான் புல்லாங்குழல் வாசித்தார். இவரின் புல்லாங்குழல் இசைக்கு மயங்காத ஆளே கிடையாது. அந்த அளவிற்கு தனது புல்லாங்குழலால் மாயம் செய்து கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசம் இழுத்தவர். இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.