மின் கட்டண உயர்வை தொடர்ந்து பால் விலையும் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய்க்கு உயர்த்தி அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் விற்பனை விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 42 ரூபாயிலிருந்து 46 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலாகிறது.