
விஜயகாந்தின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைதுள்ளார்கள்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவரை மக்கள் அன்புடன் கேப்டன் என்று அழைக்கின்றனர். பல வெற்றி படங்களை தந்து வந்த இவர் பிறகு அரசியலில் ஈடுபட்டார். தற்போது கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் உள்ளார்.
இவருக்கு உடல்நிலை சரியாகி பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறுவதற்காக தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் இது நம்ம கேப்டனா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.
