திமுகவின் முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்ததை விட எழுத்தாளராக தமிழுக்கு பல தொண்டாற்றியுள்ளார். குறிப்பாக திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியது அவருடைய பங்களிப்பு முக்கியமாக கருதப்படுகிறது. இவர் சுமார் 70 வருடங்கள் தமிழக அரசியலில் மிக முக்கியமான தலைவராக இருந்தார். தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர்.

நாட்டின் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்த பெருமை இவருக்கு உண்டு. இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் கருணாநிதி குறித்த வரலாறு பள்ளி மாணவர்களுடைய பாடப்புத்தகத்தில் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில் இவரின் தமிழ் தொண்டு தொடர்பான பாடம் இடம் பெற்றுள்ளது.