நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய விதமாக பேசி வருகிறார். அவர் பெரியாரைப் பற்றி சர்ச்சையாக பேசுவதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தார். இதற்கு பெரியாரைப் பற்றிய சீமான் விமர்சித்தது தான் காரணம் என்று கூறப்படும் நிலையில் அந்த கட்சியினரோ கடந்த இடை தேர்தலை விட தற்போது நாம் தமிழர் கட்சியினர் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளோம் என்று கூறுகிறார்கள். அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். அவர்கள் சீமான் கட்சியில் தன்னை விட வேறு யாரும் வளரக்கூடாது என்று நினைப்பதாக குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். இந்நிலையில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாகவே சீமான் பெரியாரை விமர்சிப்பார் என்றும் கட்சியில் தன்னைவிட பிறரை வளர விட மாட்டார் என்றும் ஒருவர் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, சீமானிடம் ஒரு தெளிவு இருக்கிறது. அவர் தனக்கு பயன்படும் தான் கையாளும் அளவில் தன் கட்சி இருந்தால் போதும். அதிகம் ஒரு  மில்லி மீட்டர் கூட வளர்ந்து விடக்கூடாது என்பதில் கவனத்துடன் செயல்படுவார். கொஞ்சம் குறைந்தால் ஈழம் பேசுவார். கொஞ்சம் வளர்ந்தால் பெரியாரை முட்டுவார். முரணாக பேசி தங்கள் வளர்ச்சியை மட்டப்படுத்திக் கொள்வார். அவருக்கு கொடுக்கப்பட்ட எல்லை அவ்வளவுதான். இது திட்டமிட்ட சிறிய கட்சி. தெவிட்டாத இன்பம் நிலையான வருவாய் என்று பதிவிட்டுள்ளார். சீமான் தன்னுடைய கட்சியை வளர விட மாட்டார் என்றும் அப்படி வளர்ந்தால் அவரே மட்டம் தட்டி வளர விட மாட்டார் என்றும் அவர் கூறியுள்ள நிலையில் தற்போது கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகளும் இதே குற்றச்சாட்டுகளை தான் முன்வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

 

 

View this post on Instagram

 

A post shared by Second Show (@secondshowtamil)