உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷகரன்பூர் பகுதியில் கஜேந்திர சிங் என்ற 70 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ஒரு 6 வயது சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தன் பெற்றோரிடம் நடந்த விஷயங்களை கூறிய நிலையில் அவர்கள் அங்கு சென்றனர்.

அப்போது அவர் ஒரு ஆட்டையும் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதோடு இதனை அவர் தன் செல் போனில் வீடியோவாகவும் பதிவு செய்து வைத்திருந்தார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து முதியவரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.