மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையில் பல இடங்களில் வெள்ளநீர் ஆங்காங்கே ஆறு போல காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். ஒருசில இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிலர் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால் டிவி, ஃப்ரிட்ஜ், கார் உட்பட பல விலை உயர்ந்த பொருட்கள் சேதமானது.

இவற்றை சரி செய்யவே ஒரு வீட்டிற்கு ரூ.10,000 – ரூ. 20,000 வரை செலவாகும் என பாதிக்கப்பட்ட மக்கள் புலம்புகின்றனர். இந்நிலையில், அரசு கொடுக்கும் ரூ.6,000-ஐ வைத்து இழப்பை சரி செய்ய முடியாது என்றும், கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.