சேலம் மாவட்டத்தில் உள்ள கணவாய் புதூர் ஊராட்சி லோக் கூர் ரயில் நிலையம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஐந்து பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 5 பேரும் கணவாய் புதூரைச் சேர்ந்த தென்னரசு, அண்ணாதுரை, பழனி, மாதேஸ்வரன், அறிவழகன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.