மத்திய பிரதேசம் மாநிலம் இந்துர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான ராஜா ரகுவஞ்சிக்கு சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மாதம் 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதில் சோனத்தின் தந்தை இந்தூர் பகுதியில் பிளைவுட் கடை வைத்து நடத்தி வருகிறார். இதில் சோனம் மற்றும் ராஜா இருவரும் கடந்த மாதம் 20ஆம் தேதி மேகாலயா பகுதிக்கு ஹனிமூன் சென்ற நிலையில் கடந்த 22 ஆம் தேதி இருவரும் காலிஸ் ஹில்ஸ் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளத்திற்கு ஸ்கூட்டரில் சென்றனர். இவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு கிராமத்தில் தங்கிய நிலையில் மறுநாள் அதாவது 23ஆம் தேதி இருவரின் செல்போன் நம்பர்களும் சுவிட்ச் ஆப் என வந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் தேடியதில் ராஜா ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். ஆனால் சோனம் தலைமறை வாகிவிட்ட நிலையில் 15 நாட்களுக்கு பிறகு அவரது சகோதரரிடம் செல்போனில் பேசும்போது அதனை வைத்து போலீசார் அவரை உத்தரப்பிரதேசத்தில் கைது செய்தனர். பின்னர் அவரது காதலன்‌ ராஜ் குஷாலாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது சோனம் தன்னுடைய காதலனுடன் சேர்ந்து கூலி ஆட்களை ஏவி கணவனை கொலை செய்துள்ளார்.

இன்று காலை சோனம் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருமணத்திற்கு முன்பாகவே சோனம் தன்னுடைய அப்பாவின் கடையில் வேலை பார்த்து வந்த ராஜ் குசாலாவை காதலித்துள்ளார். இதில் ராஜுக்கு சோனத்தை விட ஐந்து வயது குறைவு. இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாகவே காதல் உறவிலிருந்து நிலையில் சோனத்தின் தந்தை தன் மகளின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால்தான் திருமணத்திற்கு பிறகு தன் காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டியது தெரியவந்தது.

திட்டமிட்டபடி தன் கணவனை அங்கு அழைத்து சென்ற சோனம் பின்னர் கூலி ஆட்களை வரவழைத்துள்ளார். அவர்கள் ரகுவை கடத்தி சென்று கொடூரமாக கொலை செய்து மலைப்பகுதியில் வீசி உள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதற்கிடையில் சோனத்தின் தந்தை தன்னுடைய மகள் நிரபராதி எனவும் போலீசார் வேண்டுமென்றே தன் மகளின் மீது குற்றம் சாட்டுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஏற்கனவே முஷ்கான் என்பவர் தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் தற்போது ஹனிமூன் சென்ற இடத்தில் புது பெண் தன்னுடைய கணவனை கூலியாட்களை ஏவி கொலை செய்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.