
பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் கடந்த திங்கள்கிழமை அன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதை அடுத்து அந்த ஒரு நாளில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேல் அபராத தொகை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி No Entry விதிமுறையை மீறியதற்காக 2.31 லட்சம் அபராதமும் ஒரு வழி சாலையில் பயணித்ததற்காக 1.95 லட்சம் அபராதமும் பெறப்பட்டுள்ளது. கூடுதலாக நடைபாதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு நடைபாதையில் வாகனத்தை பார்க் செய்தவர்களுக்கு மோட்டார் சைக்கிளில் மூன்று பேராக பயணித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக 5 லட்சத்திற்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது